
செல்வன். தர்ஷன் தமிழ் அவர்களின் 08.02.2025 அன்று நடைபெற்ற 9வது பிறந்தநாளை முன்னிட்டு, 09.02.2025 இன்று, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திடன் கோரப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க, மட்டக்களப்பு பதுளை மாவட்டம், பசறை கிராமத்தைச் சேர்ந்த யூரி தமிழ் வித்தியாலத்தில் கல்வி பயிலும், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் 25 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
செல்வன். தமிழ் சகல செல்வங்களும் பெற்று, சீரும் சிறப்புமாக பல்லாண்டு காலம் வாழவேண்டுமென்று வாழ்த்துவதோடு இவ்வுதவிக்கான நிதிப்பங்களிப்பினை வழங்கிய குடும்பத்தினருக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்….!!!

