மலையகத்தில் பல்லின மக்கள் வாழும் கண்டி, மாத்தளை, நடுதாதோட்டம், கபனசெடி ஆகிய கிராமங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட 75 குடும்பத்தினருக்கு தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கையை 28.11.2025 தாக்கிய டித்வா புயலினால் ஏற்பட்ட மழை, வெள்ளம் மற்றும் மண் சரிவினால் மிகவும் பாதிக்கப்பட்ட மலையகத்தைச் சேர்ந்த பல்லின மக்கள் வாழும் கண்டி, மாத்தளை, நடுதாதோட்டம், கபனசெடி ஆகிய கிராமங்களில் மிகவும் பாதிக்கப்பட்ட 75 குடும்பத்தினருக்கு தலா 5 000 ரூபாய்க்கான உணவுப்பொதி இன்று (07.12.2025) வழங்கி வைக்கப்பட்டது.

75 பொதிகளுடனான வாகனம் அதிகாலை மட்டக்களப்பிலிருந்து புறப்பட்டது. இருந்த போதினும் மலையக்கத்தில் ஏற்பட்ட வழித்தடங்கல்னால் 3 மணி நேர காத்திருப்பிற்குப் பின், பிற்பகல் அனைத்து பொதிகளும் வழங்கப்பட்டது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முகநூல் மற்றும் குறுந்தகவல்கள் மூலம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க இத்திட்டத்திற்கு கரம் கொடுத்த உறவுகள்அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி

ஒன்றிணைவோம் சேவை செய்வோம்

Laisser un commentaire

Votre adresse e-mail ne sera pas publiée. Les champs obligatoires sont indiqués avec *

Retour en haut